ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

துரந்தர் - 2 படத்திற்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

துரந்தர் - 2 படத்திற்குத் தடை விதிக்கக் கோரிய முறையீடு பற்றி...

News image

துரந்தர் - 2

Updated On :23 மார்ச் 2026, 6:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்த திரைப்படம் துரந்தர். இந்திய உளவாளி பாகிஸ்தானில் உளவு பார்க்கச் செல்வது பற்றிய கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் பாகம் பான் இந்திய மொழிகளில் வெளியான நிலையில் 4 நாள்களில் ரூ. 691 கோடி வசூல் செய்து இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.

முதல் பாகத்தில் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான நேரடிக் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் பிரதமர் மோடி சார்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பேசும் காட்சிகள் நேரடியாக படத்தில் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் மோடியின் விடியோ படத்தில் இடம்பெறுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வில் ஆஜரான வழக்குரைஞர் ஷீலா, துரந்தர்-2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கக் கோரி முறையிட்டார்.

அதில், திரையரங்குகளில் வெளியாகி உள்ள துரந்தர்- 2 படத்தில் அரசியல் தொடர்பான ஒரு சார்பு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்குப் பின்னர் இப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார்.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.