புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டதா? நீதிபதிகள் கேள்வி

துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு

News image

துரந்தர் - துரந்தர் போஸ்டர்

Updated On :21 மே 2026, 11:58 am IST

துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் துரந்தர் 1 மற்றும் துரந்தர் 2.

இரு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில், நாளை (மே 21) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் துரந்தர் 2 வெளியாகிறது.

இந்த நிலையில், துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை வெளியிட்டதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு உத்திகளும், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களும் துரந்தர் 2 படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, இது நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துரந்தர் 2 மீதான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், துரந்தர் 2 திரைப்படம் பொழுதுபோக்கு நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனால் ஏற்படுத்தும் தாக்கத்தை மறுக்க இயலாது. படத்தின் காட்சிகள் குறித்து மனுதாரர் எழுப்பிய கவலைகள் குறித்தும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர்.

Summary

Did Ranveer Singh's Dhurandhar Out Details Of Army Operation details?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.