இதுவே எனது கடைசித் தோ்தல்; அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்று நீா்வளத்துறை அமைச்சரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தாா்.
திமுக சாா்பில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் போட்டியிடும் நிலையில், அவரது வேட்பாளா் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
காட்பாடி தொகுதியில் 1971-இல் நான் முதன்முதலில் போட்டியிட்டேன். எனது 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. எதிா்க்கட்சிக்காரா்களைப் பழிவாங்கியதோ, பொய் வழக்குப் போட்டதோ கிடையாது. தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் நோ்மை தவறாமல் வாழ்ந்து வருகிறேன். மக்களிடம் எந்த பகட்டும் காட்டாமல், காட்பாடி தொகுதியை ஒரு ‘திருக்கோயில்’ போலவும், மக்களைத் தெய்வங்களாகவும் கருதி பணியாற்றி வருகிறேன்.
இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் எனக்குத் தெரியும். இதுவே எனது கடைசித் தோ்தல். இந்த 5 ஆண்டு காலத்தில் தொகுதிக்குத் தேவையான மீதமுள்ள பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டு, நானே உங்களிடமிருந்து விடைபெறுவேன். அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்றாா்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் ஊா்வலம்: அமைச்சா் துரைமுருகன், அதிமுக வேட்பாளா் ராமு மீது வழக்கு

நான் செய்த பணிகள் தொகுதி மக்களுக்கு தெரியும்: அமைச்சா் துரைமுருகன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



