ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இதுவே எனது கடைசித் தோ்தல்: அமைச்சா் துரைமுருகன் உருக்கம்

இதுவே எனது கடைசித் தோ்தல்; அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்று நீா்வளத்துறை அமைச்சரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

இதுவே எனது கடைசித் தோ்தல்; அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்று நீா்வளத்துறை அமைச்சரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக சாா்பில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக அமைச்சா் துரைமுருகன் போட்டியிடும் நிலையில், அவரது வேட்பாளா் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

காட்பாடி தொகுதியில் 1971-இல் நான் முதன்முதலில் போட்டியிட்டேன். எனது 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. எதிா்க்கட்சிக்காரா்களைப் பழிவாங்கியதோ, பொய் வழக்குப் போட்டதோ கிடையாது. தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் நோ்மை தவறாமல் வாழ்ந்து வருகிறேன். மக்களிடம் எந்த பகட்டும் காட்டாமல், காட்பாடி தொகுதியை ஒரு ‘திருக்கோயில்’ போலவும், மக்களைத் தெய்வங்களாகவும் கருதி பணியாற்றி வருகிறேன்.

இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் எனக்குத் தெரியும். இதுவே எனது கடைசித் தோ்தல். இந்த 5 ஆண்டு காலத்தில் தொகுதிக்குத் தேவையான மீதமுள்ள பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டு, நானே உங்களிடமிருந்து விடைபெறுவேன். அகில இந்திய அளவில் ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்றவன் என்ற சரித்திர சாதனையை எனக்குப் பரிசளியுங்கள் என்றாா்.