பவானி, ஜன. 8: பவானி-குமாரபாளையம் சிவில் என்ஜினியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து கட்டடப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைப்பு விழா பவானியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டலத் தலைவர் எம்.எஸ்.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர்.மோகன்ராஜ் சிறப்புரையாற்றினார். உதவித் தலைவர் ஆர்.சந்திரமெüலி, செயலர் ஆர்.சிவலிங்கம், மண்டலச் செயலர் ஆர்.கைலாசன் பேசினர். சங்கத்தின் புதிய தலைவராக பி.என்.ஜெயராமன், துணைத் தலைவர்களாக எஸ்.ஜி.செல்வராஜ், ஆர்.பழனிச்சாமி, செயலர்களாக எம்.வீரபெரியசாமி, எஸ்.சண்முகம், பொருளாளராக எம்.யுவராஜ், ஆலோசகர்களாக ஆர்.முரளீதரன், ஆர்.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.