வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மே தின கொண்டாட்டம்: மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகிகள் இருவர் சாவு

திருப்பூர், மே. 2: திருப்பூரில் மே தினத்தை கொண்டாட கட்சி கொடி கம்பம் நட்டும்போது மின்சாரம் தாக்கியதால் தேமுதிக கிளை நிர்வாகிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர். திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்துப்புதூர் பகு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 am

ஷேக் அப்துல்காதர்

திருப்பூர், மே. 2: திருப்பூரில் மே தினத்தை கொண்டாட கட்சி கொடி கம்பம் நட்டும்போது மின்சாரம் தாக்கியதால் தேமுதிக கிளை நிர்வாகிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த பிரபு (29). இவர் அப்பகுதி தேமுதிக கிளைப் பொருளாளர். இதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (35). தேமுதிக கிளை நிர்வாகி. குளத்துப்புதூரில் மே தினம் கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை இரவு அங்கு கட்சி கொடிக்கம்பம் நட்டும் பணியில் பிரபு, பழனிச்சாமி ஈடுபட்டனர்.

கொடி கம்பத்தை தூக்கியபோது எதிர்பாராத விதமாக கால் தவறி இருவரும் அங்குள்ள சாக்கடையில் விழ நேரிட்டது. அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி விசப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர். தேமுதிக நிர்வாகிகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.