எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மே தின கொண்டாட்டம்: மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகிகள் இருவர் சாவு

திருப்பூர், மே. 2: திருப்பூரில் மே தினத்தை கொண்டாட கட்சி கொடி கம்பம் நட்டும்போது மின்சாரம் தாக்கியதால் தேமுதிக கிளை நிர்வாகிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர். திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்துப்புதூர் பகு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 am

ஷேக் அப்துல்காதர்

திருப்பூர், மே. 2: திருப்பூரில் மே தினத்தை கொண்டாட கட்சி கொடி கம்பம் நட்டும்போது மின்சாரம் தாக்கியதால் தேமுதிக கிளை நிர்வாகிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த பிரபு (29). இவர் அப்பகுதி தேமுதிக கிளைப் பொருளாளர். இதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (35). தேமுதிக கிளை நிர்வாகி. குளத்துப்புதூரில் மே தினம் கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை இரவு அங்கு கட்சி கொடிக்கம்பம் நட்டும் பணியில் பிரபு, பழனிச்சாமி ஈடுபட்டனர்.

கொடி கம்பத்தை தூக்கியபோது எதிர்பாராத விதமாக கால் தவறி இருவரும் அங்குள்ள சாக்கடையில் விழ நேரிட்டது. அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி விசப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர். தேமுதிக நிர்வாகிகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.