
மருதமலை மலைப் பாதையில் இன்றும், நாளையும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

மருதமலை
மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலைப் பாதையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்டம்பா் 14,15) நான்குசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற சனிக்கிழமை ( செப்டம்பா் 14) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 15) ஆகிய விடுமுறை நாள்களில் அதிக அளவில் பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, இந்த இரு நாள்களில் மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் மூலமாகவும் மற்றும் கோயில் பேருந்துகளிலும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




