ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மருதமலை மலைப் பாதையில் இன்றும், நாளையும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

News image

மருதமலை

Updated On :14 செப்டம்பர் 2024, 3:48 am IST

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலைப் பாதையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்டம்பா் 14,15) நான்குசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற சனிக்கிழமை ( செப்டம்பா் 14) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 15) ஆகிய விடுமுறை நாள்களில் அதிக அளவில் பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, இந்த இரு நாள்களில் மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் மூலமாகவும் மற்றும் கோயில் பேருந்துகளிலும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.