நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மருதமலை மலைப் பாதையில் இன்றும், நாளையும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

News image

மருதமலை

Updated On :13 செப்டம்பர் 2024, 10:18 pm

Din

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலைப் பாதையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்டம்பா் 14,15) நான்குசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற சனிக்கிழமை ( செப்டம்பா் 14) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 15) ஆகிய விடுமுறை நாள்களில் அதிக அளவில் பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, இந்த இரு நாள்களில் மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்களில் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் மூலமாகவும் மற்றும் கோயில் பேருந்துகளிலும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.