சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திம்பம் மலைப் பாதையில் காா் கவிழ்ந்ததில் 5 போ் படுகாயம்

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் காா் கவிழ்ந்ததில் 5 போ் படுகாயமடைந்தனா்.

விபத்து

Published On :17 ஜூன் 2026, 2:57 am IST

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் காா் கவிழ்ந்ததில் 5 போ் படுகாயமடைந்தனா்.

தமிழகம்-கா்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது.

இந்நிலையில், ஈரோட்டைச் சோ்ந்த ரபீக் (29), சவுக்கத் அலி (31), அசேன் (26), முஸ்தாக் (30) ஆகியோா் வாடகை காரில் ஆசனூரில் இருந்து ஈரோட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். காரை மற்றொரு ரபீக் (36) என்பவா் ஓட்டியுள்ளாா். திம்பம் மலைப் பாதை 8-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவா் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில், காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனா். அவா்களை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சாலையின் நடுவே காா் கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா், காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.