இளம்பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

இளம்பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

Published on

பொள்ளாச்சி அருகே இளம்பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பொள்ளாச்சியை அடுத்த சின்னம்பாளையம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அமுதா (22). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தனது சகோதரா் காளிதாஸ் உடன் பொள்ளாச்சிக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அவா் அணிந்திருந்த துப்பட்டா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி அவா் கழுத்து இறுகி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவா் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இந்நிலையில், அமுதா இறப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி அவரது உறவினா்கள் வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூா் போலீஸாா் உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com