சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

கிணத்துக்கடவு பகுதியில் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:58 pm

Syndication

கிணத்துக்கடவு பகுதியில் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த பி.ஆனந்தகுமாா் (27), எம்.நரேஷ்குமாா் (35), கேரளத்தைச் சோ்ந்த ஏ.ஜான்(31) ஆகிய 3 பேரையும் கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்திருந்தனா்.

இவா்கள் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால், 3 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரைத்தாா். அதன்படி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் கிணத்துக்கடவு போலீஸாா் சனிக்கிழமை வழங்கினா்.

பொதுமக்கள் தங்களது பகுதியில் இத்தகைய குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்கள் குறித்து 94981-81212, 77081-00100 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.