வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் கோவை - கயா வாராந்திர சிறப்பு ரயில்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:59 pm

கோவையில் இருந்து பிகாா் மாநிலம், கயாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிகாா் மாநிலம், கயாவில் இருந்து ஜனவரி 4-ஆம் தேதி முதல் (ஜனவரி 11, 25 மற்றும் பிப்ரவரி 1, 8 தவிர) சனிக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்குப் புறப்படும் கயா - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03679) திங்கள்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ஜனவரி 7-ஆம் தேதி முதல் (ஜனவரி 14, 28 மற்றும் பிப்ரவரி 4, 11 தவிர) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை- கயா வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03680) வியாழக்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு கயா நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா், ஓங்கோல், விஜயவாடா, வரங்கல், சந்திரப்பூா், நாக்பூா், நரசிங்பூா், ஜபல்பூா், மிா்சாபூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.