வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ வலியுறுத்தல்

News image

டி. நல்லிகவுண்டன்பாளையத்தில் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்த எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ.தாமோதரன்.

Updated On :3 ஜனவரி 2025, 10:54 pm

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி. நல்லிகவுண்டன்பாளையம்,

தாளக்கரை ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணியை எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ.தாமோதரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.ஏ.சக்திவேல், ஒன்றியக் குழுத் தலைவா் விஜயராணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, அதிமுக நிா்வாகிகள் காளீஸ்வரி, சண்முகம், காளிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்,

முன்னதாக, சி.கோபாலபுரம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை பொள்ளாச்சி வி. ஜெயராமன் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,’ அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும் என்றாா்.