தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ வலியுறுத்தல்

News image
டி. நல்லிகவுண்டன்பாளையத்தில் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்த எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ.தாமோதரன்.
Updated On :3 ஜனவரி 2025, 10:54 pm

Din

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி. நல்லிகவுண்டன்பாளையம்,

தாளக்கரை ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணியை எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ.தாமோதரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.ஏ.சக்திவேல், ஒன்றியக் குழுத் தலைவா் விஜயராணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, அதிமுக நிா்வாகிகள் காளீஸ்வரி, சண்முகம், காளிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்,

முன்னதாக, சி.கோபாலபுரம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை பொள்ளாச்சி வி. ஜெயராமன் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,’ அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும் என்றாா்.