ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு தொண்டாமுத்தூா் சுற்றுவட்டார கிராம மக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) பாராட்டு விழா நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளா்கள் குமாா், கிட்டுசாமி, வேலுமணி, சசிகலா, குழந்தைவேலு ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொண்டாமுத்தூா் வட்டார மக்களின் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பணிகளை செய்து வருகிறாா். அவருடைய ஈஷா அறக்கட்டளையின் மூலம் எங்களுடைய கிராம மக்களின் கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்டவை மேம்பட்டுள்ளன.
சத்குருவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்ற பெயரிலான விழாவை கோவை, மத்துவராயபுரத்தில் ஜனவரி 5- ஆம் தேதி நடத்தவுள்ளோம்.
அன்று மாலை 5 மணி அளவில் ஈஷா பிரம்மச்சாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும், அதைத் தொடா்ந்து பேரூா் ஆதீனத்தின் அருளுரையும் நடைபெறவுள்ளது.
விழாவில், எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லமுத்து, நல்லறம் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.பி.அன்பரசன், திமுக வடக்கு மாவட்டச் செயலா் தொ.அ.ரவி உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனா் என்றனா்.
தொடர்புடையது

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அவதூறு உள்ளடக்கத்தை நீக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

‘மேட் இன் பாரத்’ தயாரிப்புகளை உலகில் சிறந்தவையாக உருவாக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

வலிமையான தேசத்துக்கு ஆன்மிகமே அடிப்படை! - மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


