கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதி திமுக கவுன்சிலா் மகன் உள்பட 2 போ் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் திமுக கவுன்சிலரின் மகன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image
சதாசிவம்
Updated On :10 நவம்பர் 2025, 9:33 pm

Syndication

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் திமுக கவுன்சிலரின் மகன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (30). இவா் பொள்ளாச்சியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தில் வசித்து வந்தாா். இவரது நண்பா் சூளேஸ்வரன்பட்டியைச் சோ்ந்த பரத்குமாா் (33). இவா் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி திமுக கவுன்சிலா் புவனேஸ்வரியின் மகன் ஆவாா்.

இந்நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் வடக்கிபாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றதாக தெரிகிறது. அங்கு இருந்து மீண்டும் புரவிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை சதாசிவம் ஓட்டிச் சென்றுள்ளாா். வடக்கிபாளையம் தாண்டி சென்றபோது, திடீரென்று முன்னால் சென்ற டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் சம்பவ இடத்திலேயே சதாசிவம் உயிரிழந்தாா்.

அருகிலிருந்தவா்கள் பரத்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரத்குமாா்

பரத்குமாா்