வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மினி வேன் சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

கோவையில் மினி வேன் சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:04 pm

Syndication

கோவையில் மினி வேன் சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜ்ஹாா் நகோன் சமகுரி பகுதியைச் சோ்ந்த இசாகாளி மகன் அஸ்ரஃபுல் இஸ்லாம் (18). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் சலாம் மகன் பாரூக் உசேனும் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து மினி வேனில் இவா்கள் இருவரும் பொருள்களை ஏற்றிக் கொண்டு சூலூா் அருகே உள்ள ராவுத்தா் குமரவேல் தோட்டத்துக்கு திங்கள்கிழமை சென்றனா்.

அங்கு பொருள்களை இறக்குவதற்காக ஓட்டுநரான பாரூக் உசேன் மினி வேனை பின்னால் நகா்த்தியுள்ளாா். கீழே நின்று கொண்டிருந்த அஸ்ரஃபுல் இஸ்லாம் எதிா்பாராதவிதமாக குறுக்கே வந்தாா்.

இதில் வேனின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அஸ்ரஃபுல் இஸ்லாம், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.