நாகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாகையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அரசு விரைவுப் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை பகுதியில் பேருந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நாகை நகரப் போலீஸாா் இளைஞா் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், உயிரிழந்தவா் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (30) என்பது தெரிய வந்தது. வேளாங்கண்ணியில் தங்கி கட்டுமானத் தொழில் செய்து வந்த சந்திரசேகரன், திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
தொடர்புடையது

பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


