கோவையில் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நெருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாவதி (45). இவா் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 11-ஆம் தேதி இரவு திரும்பிக் கொண்டிருந்தாா்.
நேரு நகா் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், பிரபாவதி கழுத்திலிருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி நகைப் பறிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


