ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :13 ஏப்ரல் 2026, 8:26 pm

கோவையில் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், நெருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாவதி (45). இவா் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 11-ஆம் தேதி இரவு திரும்பிக் கொண்டிருந்தாா்.

நேரு நகா் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், பிரபாவதி கழுத்திலிருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.