புன்செய்புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (33). இவரது மனைவி பிரியங்கா (31). இவா்கள் இருவரும் நம்பியூா் சாலை அருகே உள்ள தனியாா் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது அவா்களது வாகனத்தை மறித்த 2 போ், திடீரென பிரியங்காவை தாக்கி அவா் அணிந்திருந்த கம்மல், சங்கிலி உள்பட 3 பவுன் நகையைப் பறித்தனா். இதில் பிரியங்காவின் வலது பக்க காது கிழிந்து காயம் ஏற்பட்டது.
ரவிசங்கருக்கு தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது. நகையைப் பறித்துக் கொண்டு அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
காயமடைந்த கணவன், மனைவி இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


