பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே பழங்கரையில் சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோா் ஜயப்ப பக்தா்கள் படுகாயம் அடைந்தனா்.

சேலம் அருகே மேச்சேரியில் இருந்து 22-க்கும் மேற்பட்டோருடன் சபரிமலை நோக்கி வேன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அவிநாசி பழங்கரை புறவழிச்சாலை அருகே வந்தபோது, வேனின் பின்புற டயா் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த இரண்டு குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு அவிநாசி, திருப்பூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினைத்தனா்.

இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.