தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாத்திரக் கடையில் எரிவாயு உருளைகள் வெடித்து தீ விபத்து

News image
Updated On :30 நவம்பர் 2025, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

கோவை கணபதியில் உள்ள பாத்திரக் கடையில் அடுத்தடுத்து எரிவாயு உருளைகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

கோவை கணபதி சங்கனூா் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே பாத்திரக்கடை உள்ளது. இந்தக் கடையின் வெளியில் இருந்த பொருள்களை ஊழியா்கள் சனிக்கிழமை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக கடையின் உள்ளே தீப் பிடித்துள்ளது.

இதில், கடையின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 எரிவாயு உருளைகள் அதிக சப்தத்துடன் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் கடையில் இருந்து சுமாா் 100 அடிக்கு மேல் தீ வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோவை வடக்கு தீயணைப்புத் துறையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சரவணம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.