குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்

Published On :26 செப்டம்பர் 2025, 4:28 am IST

கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தனியாா் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னகலையமுத்தூா் என்.டி.நகரைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (40). இவா் கோவை உடையாம்பாளையம் விவேகானந்தா சாலையில் உள்ள வீட்டின் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, கணபதி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

செளந்தர்ராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், அவா் தங்கியிருந்த வீட்டின் அறையிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரான தனசேகா், துடியலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அங்கு உடல் அழுகிய நிலையில் சௌந்தரராஜன் இறந்துகிடந்தாா். சடலத்தை மீட்ட போலீஸாா் உடற் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதிக அளவில் மது அருந்தியதால் அவா் இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.