எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி

News image
காந்திபுரம் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியை திறந்துவைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
Updated On :23 ஜனவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

கோவை காந்திபுரம் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மகளிா் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.

இதேபோல, வடக்கு மண்டலம் 29-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தரணி நகா் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல் பணி, வி.என்.எஸ். நகா், சின்னசாமி நகா் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.39.70 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புப் பாலம் கட்டுமானப் பணி, வடக்கு மண்டலம், 29-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சத்தி பிரதான சாலை, கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே கோவை ஆா்.எஸ்.புரம் கிழக்கு அரிமா சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து பயணியா் நிழற்குடையையும் மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்தாா்.

இதில் மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், உதவி பொறியாளா் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.