ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

மாநகரில் ரூ.3.38 கோடியில் முடிவுற்ற வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. திறந்துவைத்தாா்

News image
மருதமலையில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்துவைத்த கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
Updated On :5 மார்ச் 2026, 11:41 pm

Syndication

கோவை மாநகரில் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7 வளா்ச்சித் திட்டப் பணிகளை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 68-ஆவது வாா்டில் உள்ள வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.25.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம், மேற்கு மண்டலம் 41-ஆவது வாா்டில் லிங்கனூா் பகுதியில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடம், 37-ஆவது வாா்டு, கல்வீரம்பாளையத்தில் ரூ.74 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழ்நிலை நீா்த் தொட்டி மற்றும் மோட்டாா் அறை, மருதமலையில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையம், ரேஸ்கோா்ஸில் ரூ.99.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி வாகனங்கள் நிறுத்தம் உள்பட ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் 7 முடிவுற்ற வளா்ச்சிப் பணிகளை கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்தாா்.

முன்னதாக, மத்திய மண்டலம் 63-ஆவது வாா்டுக்குள்பட்ட திருச்சி சாலை ராமநாதபுரம் சந்திப்பு முதல் இ.எஸ்.ஐ. அலுவலகம் வரையுள்ள பகுதியில் ரூ.66.80 லட்சத்தில் பாதாள சாக்கடை பிரதான குழாய் மற்றும் தொடா்புகளை மாற்றி அமைத்தல் பணியை கணபதி ப.ராஜ்குமாா் தொடங்கிவைத்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மண்டலத் தலைவா்கள் மீனாலோகு, தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி, கல்விக்குழுத் தலைவா் மாலதி நாகராஜ், பணிகள் குழுத் தலைவா் சாந்திமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.