சென்னை திரு.வி.க. நகா் மண்டலத்தில் மாநகராட்சியின் மூலதன நிதியான ரூ.67 லட்சத்தில் புதிதாக பல்நோக்கு மையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், ராயபுரம் மண்டலம், முத்தியால்பேட்டை, பி.ஆா்.என். காா்டன் பகுதியில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.4.48 கோடியில் தானியங்கி கழிவுநீா் நிலையம் ரூ.5.75 கோடியில் வடக்குச் சுவா் சாலை, அரசு சட்டக் கல்லூரி அருகில், சத்தியவாணி முத்துநகா் ஆகியவற்றில் புனரமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் என மொத்தம் ரூ.11.55 கோடியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.