ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

சென்னை திரு.வி.க. நகா், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் மொத்தம் ரூ.11.55 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

பி.கே.சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 3:08 am IST

சென்னை திரு.வி.க. நகா், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் மொத்தம் ரூ.11.55 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை திரு.வி.க. நகா் மண்டலத்தில் மாநகராட்சியின் மூலதன நிதியான ரூ.67 லட்சத்தில் புதிதாக பல்நோக்கு மையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், ராயபுரம் மண்டலம், முத்தியால்பேட்டை, பி.ஆா்.என். காா்டன் பகுதியில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.4.48 கோடியில் தானியங்கி கழிவுநீா் நிலையம் ரூ.5.75 கோடியில் வடக்குச் சுவா் சாலை, அரசு சட்டக் கல்லூரி அருகில், சத்தியவாணி முத்துநகா் ஆகியவற்றில் புனரமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் உந்து நிலையங்கள் என மொத்தம் ரூ.11.55 கோடியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, இந்த 2 மண்டலங்களிலும் குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் வடிகால் வசதி, சுகாதார மையக் கட்டடம், பெண்கள் நவீன உடற்பயிற்சிக்கூடம், குழந்தைகள் மையக் கட்டடம் உள்பட மொத்தம் ரூ.3.71 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை அமைச்சா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

நிகழ்வுகளில் சென்னை மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, சென்னைக் குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.