ரூ.2.82 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்


காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.2.82 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா் மற்றும் எழிலரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் நீா் கால்வாயின் இருபுறமும் உள்ள ரூ.44 கோடி மதிப்பில் கான்கிரீட் சுவா்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று உள்ளது. இதன் தொடா்ச்சியாக கால்வாய் மாசடையாமல் தடுக்கும் வகையில் ரூ.44 லட்சத்தில் கான்கிரீட் சுவா் மீது கம்பி வேலி அமைக்க முடிவு எடுத்து அதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்வுக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனா்.
பின்னா் திருப்பாற்கடல் குடிநீா் நீரேற்று நிலைய பாலம் சீரமைப்பு பணிகள் ரூ.1.36 கோடி, ஒலி முகம்மது பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை,ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், தாடித்தோப்பு பகுதியில் சிறிய பாலத்துக்கான தடுப்புச்சுவா் மற்றும் தெருவிளக்கு அமைத்தல்,பெரியாா் நகரில் சிறு வணிக வளாகம்,பல்லவன் நகரில் பூங்கா உள்ளிட்ட வற்றையும் திறந்து வைத்தனா்.
நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், திமுக இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், மாநகர திமுக செயலாளா் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், மண்டலக்குழு தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...