ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறைக்குப் பின் குறைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:21 pm

இ-பாஸ் நடைமுறைக்குப் பின் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

உதகை, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதுபோல, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த ஆண்டு நவம்பா் 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

ஒரு நாளைக்கு 1,500 சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.

கடந்த காலங்களை விட சுற்றுலா வாகனங்கள் வெகுவாக குறைந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். இதனிடையே இ-பாஸ் நடைமுறையில் மேலும் வாகன எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என்றும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனா்.