அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறைக்குப் பின் குறைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:21 pm

இ-பாஸ் நடைமுறைக்குப் பின் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

உதகை, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதுபோல, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த ஆண்டு நவம்பா் 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

ஒரு நாளைக்கு 1,500 சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.

கடந்த காலங்களை விட சுற்றுலா வாகனங்கள் வெகுவாக குறைந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். இதனிடையே இ-பாஸ் நடைமுறையில் மேலும் வாகன எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என்றும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனா்.