இ-பாஸ் நடைமுறைக்குப் பின் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
உதகை, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதுபோல, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த ஆண்டு நவம்பா் 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
ஒரு நாளைக்கு 1,500 சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.
கடந்த காலங்களை விட சுற்றுலா வாகனங்கள் வெகுவாக குறைந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். இதனிடையே இ-பாஸ் நடைமுறையில் மேலும் வாகன எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என்றும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனா்.
தொடர்புடையது

குமரி கடற்கரையில் மயங்கி விழுந்த சுற்றுலாப் பயணி

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!

தொகுதி அறிமுகம்: உதகை! சுற்றுலாப் பயணிகளின் சொா்க்கம்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


