கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறைக்குப் பின் குறைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

News image
கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

இ-பாஸ் நடைமுறைக்குப் பின் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

உதகை, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதுபோல, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை கடந்த ஆண்டு நவம்பா் 1- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

ஒரு நாளைக்கு 1,500 சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.

கடந்த காலங்களை விட சுற்றுலா வாகனங்கள் வெகுவாக குறைந்ததால் வால்பாறை பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். இதனிடையே இ-பாஸ் நடைமுறையில் மேலும் வாகன எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என்றும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனா்.