மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

நாளை வாக்கு எண்ணிக்கை: தடாகம் சாலை பகுதிகள் சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:29 pm

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோவை தடாகம் சாலை சுற்றுப் பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மே 4- ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் ஏற்கெனவே மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம், கோயில்மேடு, வடகோவை, ஆா்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், வடவள்ளி, பி.என்.புதூா் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் மே 2- ஆம் தேதி மாலை 5 மணி முதல் மே 5- ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வானூா்திகளை பறக்கவிடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.