ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

காவல் துறை கொடி அணிவகுப்பு

News image

கோவையில் கொடி அணிவகுப்பில் பங்கேற்ற காவலா்கள்.

Updated On :3 மே 2026, 6:40 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் காவல் துறையினரின் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவையில் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறவும், மக்களுக்கு அச்சத்தை போக்கவும் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் சுமாா் 2 ஆயிரம் காவல் துறையினா் பங்கேற்றனா். காந்திபுரம் செம்மொழிப் பூங்கா எதிரில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், கிராஸ்கட் வீதி, சிவானந்தா காலனி வழியாக டாடாபாத் பகுதியில் நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் மாநகர காவல் உயா் அதிகாரிகள், காவல் துறையினரின் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பங்கேற்றன.

Story image