தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

ஜப்பானியர்கள் விரும்பும் சிறு குறிஞ்சான் மூலிகை: வேளாண் பல்கலை.யில் விற்பனை அதிகரிப்பு

நீரிழிவு நோய்க்கு மருந்தாகக் கருதப்படும் சிறு குறிஞ்சான் மூலிகைச் செடியின் விற்பனை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாற்று விற்பனை நிலையத்தில் அதிகரித்துள்ளது.

Updated On :6 ஜூலை 2016, 3:32 pm IST

நீரிழிவு நோய்க்கு மருந்தாகக் கருதப்படும் சிறு குறிஞ்சான் மூலிகைச் செடியின் விற்பனை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாற்று விற்பனை நிலையத்தில் அதிகரித்துள்ளது.

 படரும் கொடி வகையான சிறு குறிஞ்சான் மூலிகை மலைப் பிரதேசங்களில் வளரக் கூடியது. சிறு இலைகளைக் கொண்டுள்ள இந்தத் தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவக் குணம் மிக்கதாக கருதப்படுகிறது.

 இந்த மூலிகையின் இலைகள் நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாக, அண்மைக் காலமாக பொதுமக்களிடையே வேகமாக தகவல் பரவி வருகிறது. இதனால் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்த செடியின் விற்பனை அமோகமாக இருப்பதாக அதன் பணியாளர்கள் கூறுகின்றனர்.

 பத்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்த செடியை வாங்கிச் சென்று வீடுகளில் வளர்க்கும் பொதுமக்கள், நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு இலை வீதம் பறித்து பச்சையாக உட்கொள்கின்றனர்.

 இந்த மூலிகையின் பெருமை குறித்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் பாடியிருந்தாலும், ஜப்பானியர்களால்தான் இப்போது நமது நாட்டவர்களுக்கு சிறு குறிஞ்சான் வேகமாக அறிமுகமாகியிருப்பதாகக் கூறுகிறார் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருந்து, வாசனைப் பொருள்கள் துறைத் தலைவர் கே.ராஜாமணி.

 ஜிம்னீக் எனப்படும் அமிலம் சிறு குறிஞ்சான் இலைகளில் உள்ளது. இதை உட்கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான பொருள்கள் மீதான ஆர்வம் குறைவதாகவும், அதனால் நீரிழிவு நோய் கட்டுப்படுவதாகவும் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதனால் சிறு குறிஞ்சான் மூலிகைக்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு உள்ளது.

 இந்த மூலிகை செடி கோவை, கிருஷ்ணகிரி மலைப் பகுதிகளில் பரவலாக காணப்பட்டாலும் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை பகுதியில் கிடைக்கும் சிறு குறிஞ்சான் பிரபலமானது. சிறு குறிஞ்சானில் மொத்தம் சுமார் 40 வகைகள் உள்ளன. அதில் கூடுதல் கசப்புத் தன்மை, அதிக சக்தி கொண்ட ரகத்தைக் கண்டறிவதற்கான இன ஆராய்ச்சி, வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

 இந்த ஆராய்ச்சியின் முடிவு தேசிய மருந்துப் பயிர்கள் வாரியத்துக்கு அளிக்கப்படும். அதன் பிறகு காடுகளில் மட்டுமே இதுவரை காணப்பட்டு வந்த சிறு குறிஞ்சான், அதிக மகசூல் என்ற இலக்குடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

 உற்பத்தி செய்யப்படும் மூலிகையானது மக்களுக்கும், மருந்து நிறுவனங்களுக்கும், ஏற்றுமதிக்கும் தகுந்தவாறு பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.