மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சின்மயா மிஷனின் ஆன்மிக சந்திப்பு!

சின்மயா மிஷனின் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆன்மிக சந்திப்பு குறித்து...

News image

விழா மேடையில்... - படம் : சின்மயா மிஷன்

Updated On :11 மே 2026, 8:05 pm IST

சின்மயா மிஷன் தனது 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒரு மாபெரும் ஆன்மிக சந்திப்பை நடத்தி, உலகின் பல்வேறு இந்து மரபுகளைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சந்நியாசிகள் மற்றும் ஆன்மிகத் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்று கூட்டியது. இந்த நிகழ்வு பரஸ்பர அன்பு, மரியாதை மற்றும் ஆன்மிக ஒற்றுமையின் அபூர்வ வெளிப்பாடாக அமைந்தது.

விழா மேடையில்...

விழா மேடையில்...

இந்நிகழ்வில் சுவாமி சின்மயானந்தர் அவர்களின் மகத்தான ஆன்மிகப் பாரம்பரியத்திற்கும், சனாதன தர்மத்தை உலகளவில் பரப்பிய அவரது அரிய பங்களிப்பிற்கும் மனமார்ந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. சுவாமி ஷஷிஷிகானந்தர், ராமகிருஷ்ண மிஷன் சார்பில் உரையாற்றுகையில், “குருதேவ் சுவாமி சின்மயானந்தர் இரண்டாவது விவேகானந்தர்” என்று புகழாரம் சூட்டினார்.

சுவாமி அம்ரித ஸ்வரூபானந்தர், மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் உரையாற்றியபோது, ''சுவாமி சின்மயானந்தரின் தேசப்பற்று வெறும் உணர்ச்சியால் அல்ல, உலகுக்கு பாரதம் அளிக்கும் ஆன்மிகப் பார்வையின் ஆழமான புரிதலால் உருவானது'' என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மது பண்டிட் தாஸ் பேசுகையில், இஸ்கான் நிறுவனர் ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரோடு தொடர்புடைய ஒரு முக்கிய சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். இஸ்கானின் வெளிநாட்டு பக்தர்கள் குருவாயூர் கோவில் மற்றும் பத்மநாபசுவாமி கோவில் ஆகிய கோவில்களில் அனுமதி பெறுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர், சுவாமி சின்மயானந்தர் ஒரு கடிதம் கொடுத்தால் இந்த கோவில்களில் வெளிநாட்டு பக்தர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்றும், சனாதன தர்மத்தின் அனைவர் சேர்க்கைச் சிந்தனையை வலியுறுத்திய குருதேவர் (சுவாமி சின்மயானந்தர்), இஸ்கான் பக்தர்கள் “உறுதியான இந்துக்கள்” என்று குறிப்பிட்டு கடிதம் கொடுத்ததாகவும், அவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து கோவில் நிர்வாகங்கள் அனுமதி வழங்கின என்றும் கூறினார்.

மேலும், சுவாமி அவதேஷானந்த கிரி, சுவாமி சின்மயானந்தரை “ஆதி சங்கராசார்யரின் ஞான ஹம்ச அவதாரம்” என்று வர்ணித்து, உலகம் முழுவதும் இந்து சமுதாயத்தை ஒன்றிணைத்த அவரின் ஆன்மிகப் பெரும்பணியைப் பாராட்டினார்.

Summary

Chinmaya Mission's Spiritual Gathering

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.