
கோவையில் மாநில தகவல் ஆணையர்கள் விசாரணை
கோவை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர்கள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர்கள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்கள் கிறிஸ்டோபர் நெல்சன், பி.தமிழ்செல்வன், ஜி.முருகன் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மனுதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தகவல் ஆணையர்கள் தீர்ப்பு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






