ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பொள்ளாச்சியில் பாரம்பரிய கிராமிய நிகழ்ச்சிகள்

தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிராமிய பண்டிகை நிகழ்ச்சி பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:54 am

DIN

தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிராமிய பண்டிகை நிகழ்ச்சி பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியை  தமிழ்நாடு டிராவல் மார்ட்  அமைப்பு,  சமத்தூர் ஜமீன்,  ஊத்துக்குளி ஜமீன்,  சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான தேவராட்டம்,   ரேக்ளா,  சக்திக் கும்பம் எடுத்தல், கத்திபோடுதல்,  தேங்காய் போடுதல், உறித்தல்,  செங்கல் அறுப்பு,  சிக்காட்டம், குறவஞ்சி,  வர்மக்கலை,  நெல்குத்துதல்,  சலித்தல்,  உரல்,  அம்மியில் ராகி நெறித்தல்,  மோர்சிலுப்புதல்,  குண்டு விளையாட்டு,  கில்லி,  கபடி,  பல்லாக்குழி,  தோப்புக்கரணம்,  பம்பரம் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 தொடர்ந்து ஏற்றம் நீர் இறைத்தல்,  கோழிச்சண்டை,  முளைப்பாரி கோலம்,  யாகம், திருமணம்,  பூவோடு எடுத்தல்,  கிளிஜோசியம்,  பட்டிப்பொங்கல்,  அலகு குத்துதல்,  கொலு வைத்தல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய நடைமுறைகள் நிகழ்ச்சிகள் குறித்து நிகழ்ச்சிகளாக செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு,  கனடா,  தென்ஆப்பிரிக்கா,  லண்டன்,  பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா,  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
இந்தியாவில்,  பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கி வரும் 25-ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த நிகழ்ச்சி சென்னையிலும், பொள்ளாச்சியிலும் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.