காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோவை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 200- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவை வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் சுதீஷ் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம்.
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் சென்றபோது நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விளம்பரப் பதாகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகளை கிழித்து தங்களது எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 6 - நேரலை!

மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம்: காங்கிரஸ்

ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி?
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


