வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சூலூர் அருகே பாப்பம்பட்டியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பங்கேற்றார். அங்கு சாய்பாபா கோயிலுக்கு அடிக்கல் நட்டினார்.விழாவில் கயிறுவாரிய இயக்குநர் மோகன்மந்திராசலம் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும். மத்திய அரசு ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தென்னை நாரை பயன்படுத்தி மதிப்புக்கூட்டும் பொருள்களை கயிறு வாரியம் செய்துவருகிறது. ரூ.2,535 கோடி அளவுக்கு கயிறு பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஏற்றுமதி இலக்கு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமேசான் சுதந்திர தின சலுகை! என்னென்ன வாங்கலாம்?

முதல்முறையாக இணையும் அஜித் குமார் - ஷங்கர் கூட்டணி?

அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிப்பு!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!


