குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

சாலை விபத்தில் பெண் சாவு

சூலூர் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சூலூர் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
 சூலூரை அடுத்த ஒண்டிப்புதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் சூலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் தனபாக்கியம்(30). இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில்,  இத்தம்பதி சூலூர் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்கு  இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
வழியில்,  திருச்சி சாலையில் உள்ள குமரன் கோட்டம் அருகே சாலையில் நாய் குறுக்கே ஓடியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற இந்தத் தம்பதி நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்தனர். இதில், தனபாக்கியம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சண்முகசுந்தரம் சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சண்முகசுந்தரம் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற தனபாக்கியம் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்து விட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.