வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் பொருள்கள் திருட்டு

சூலூர்அருகே தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். 

Updated On :9 ஜூலை 2018, 1:49 am

சூலூர்அருகே தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். 
சூலூர் அருகேயுள்ள மயிலம்பட்டியில் தங்கதுரை என்பவருக்குச் சொந்தமான என்ஜினீயரிங் தொழில் நிறுவனம் உள்ளது. இங்கு சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜூலை1ஆம் தேதி இரவு மர்மநபர்கள் நிறுவனத்தின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமினிய சமையல் பொருள்கள் மற்றும் உபகரணங்களை சாக்குகளில் கட்டி வேன்மூலம் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவன உரிமையாளர்அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இத் திருட்டில் பல பேர் ஈடுபட்டிருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து திருடியவர்களைஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் தங்கராஜ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.