எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் பொருள்கள் திருட்டு

சூலூர்அருகே தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:49 am

DIN

சூலூர்அருகே தொழில் நிறுவனத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். 
சூலூர் அருகேயுள்ள மயிலம்பட்டியில் தங்கதுரை என்பவருக்குச் சொந்தமான என்ஜினீயரிங் தொழில் நிறுவனம் உள்ளது. இங்கு சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜூலை1ஆம் தேதி இரவு மர்மநபர்கள் நிறுவனத்தின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமினிய சமையல் பொருள்கள் மற்றும் உபகரணங்களை சாக்குகளில் கட்டி வேன்மூலம் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவன உரிமையாளர்அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இத் திருட்டில் பல பேர் ஈடுபட்டிருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து திருடியவர்களைஅடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் தங்கராஜ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.