மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுக் கூட்டம்

கோவையில் ப்ளோ மகளிர் அமைப்பு (ஃபிக்கி) மற்றும் தேசிய பங்குச் சந்தை சார்பில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில்  நடைபெற்றது. 

Updated On :9 ஜூலை 2018, 1:52 am

கோவையில் ப்ளோ மகளிர் அமைப்பு (ஃபிக்கி) மற்றும் தேசிய பங்குச் சந்தை சார்பில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில்  நடைபெற்றது. 
நிகழ்ச்சியை தேசிய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அமைப்பின் உதவி மேலாளர் சிவபாஜம் தொடங்கிவைத்து பேசியதாவது: 
இந்தியாவில் பங்குச் சந்தையில்  மொத்தம் 1.73 கோடி பேர் முதலீடு செய்துள்ளனர்.  நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்காக நாடு முழுவதிலும் 30 ஆயிரம் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவையில் மட்டும் 60 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
 கடந்த மாதம் வரை சுமார் ரூ.175 லட்சம் கோடிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவுக்கு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் முதலீட்டு மையங்கள் மூலமாகவே முதலீடு செய்வது நல்லது. சில முதலீட்டு மையங்கள் இலவச சேவையை வழங்கினாலும், சில மையங்கள் தரகு கூலியை பெற்றுக் கொண்டு பணிகளை செய்கிறது.
 எதில்முதலீடு செய்வது என்றாலும்,  உங்களின் வங்கிக் கணக்கு மூலமாகவே செய்ய வேண்டும். குறைந்த அளவிலான பணத்தை முதலீடு செய்வோர், அவர்களின் பெயரிலேயே முதலீடு செய்து கொள்ளலாம் என்றார். 
இந்நிகழ்ச்சியில் கோவை கேப்பிடல் நிறுவன கிளைத் தலைவர் வீரமணி, ப்ளோ மகளிர் அமைப்பின் தலைவர் ஜெயந்தி மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.