கோவில்பாளையம் ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பாளையம் ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் இந்திய அளவிலான பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சித் தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் சங்கரசுப்ரமணியன் தலைமை வகித்தார். புது தில்லியில் உள்ள அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவர் மணிவண்ணன் பேசியதாவது:
தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களது கடந்த கால அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். மேலும், ஒவ்வொருவரும் அவர்களது தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்னோடியாகத் திகழவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் இந்திராதேவி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

