ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் திருட்டு

கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகளை மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர். 

Updated On :5 நவம்பர் 2018, 7:40 am IST

கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகளை மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர். 
கோவை, ரத்தினபுரி ஜி.பி.எம். நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 
இந்த நிலையில்,  குடும்பத்துடன் மதுரைக்கு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்றுள்ளார்.  பின்னர் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 
உள்ளே சென்றுபார்த்தபோது,  பீரோவில் இருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்: வெள்ளலூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையம் காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (37). இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.