திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் திருட்டு

கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகளை மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர். 

Updated On :5 நவம்பர் 2018, 7:40 am IST

கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகளை மர்ம நபர்கள்  திருடிச் சென்றனர். 
கோவை, ரத்தினபுரி ஜி.பி.எம். நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 
இந்த நிலையில்,  குடும்பத்துடன் மதுரைக்கு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்றுள்ளார்.  பின்னர் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 
உள்ளே சென்றுபார்த்தபோது,  பீரோவில் இருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்: வெள்ளலூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையம் காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (37). இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.