கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, ரத்தினபுரி ஜி.பி.எம். நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், குடும்பத்துடன் மதுரைக்கு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த 25 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: வெள்ளலூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையம் காளியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (37). இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி





