கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவைக் கிளை ஆகியன சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தான விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண் தான விழிப்புணர்வுப் பேரணியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார். இப்பேரணியில் கோவை கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர் மற்றும் கண் வங்கி பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பார்வையற்ற ஒரு நாயும், கால்களை இழந்த ஒரு நாயும் பேரணியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

