உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரம் முழுவதும் ரயில் சேவை

கோவை-மேட்டுப்பாளையம் இடையே  வாரத்தில் ஏழு நாள்களும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:41 am IST

கோவை-மேட்டுப்பாளையம் இடையே  வாரத்தில் ஏழு நாள்களும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் வாரத்தில் ஏழு நாள்களும், அதாவது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி காலையில் 8.15, 10.40, பிற்பகல் 1 மற்றும் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகள் ரயில் புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும். 
 மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து காலை 9, முற்பகல் 11.50, மாலை 3.15 மற்றும் 5.55 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.