கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரத்தில் ஏழு நாள்களும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் வாரத்தில் ஏழு நாள்களும், அதாவது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி காலையில் 8.15, 10.40, பிற்பகல் 1 மற்றும் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகள் ரயில் புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து காலை 9, முற்பகல் 11.50, மாலை 3.15 மற்றும் 5.55 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது: அன்புமணி

திருப்பூரில் 47 வாக்குகள் கூடுதலாக பதிவான விவகாரம்: பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
