ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சூலூரில் தீவன அரவை ஆலைகளில் கேரள போலீஸார் சோதனை?

சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீவன அரவை ஆலைகளில் சோதனை நடத்த

Updated On :23 ஜனவரி 2019, 9:17 am IST

சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீவன அரவை ஆலைகளில் சோதனை நடத்த கேரள போலீஸார் சூலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
கேரளத்தில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய உணவு பாதுகாப்புக் கழக கிடங்குகளில் இருந்த உணவு தானியங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கெட்டுப் போயின.  
அந்த கெட்டுப்போன தானியங்கள் கிடங்குகளில் காணவில்லை எனவும், அவை தமிழகம், கர்நாடகம்  மாநிலங்களில்  உள்ள கோழித் தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அந்த கேரள மாநில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. 
இந்நிலையில், கேரள மாநிலம்,  வாளையாறு காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளர் அன்சார் தலைமையில் 6 பேர்  கொண்ட குழுவினர் சூலூர் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்திருந்தனர்.  
பின்னர் அவர்கள் சூலூர் போலீஸார் உதவியுடன் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீவன அரவை ஆலைகளில் சோதனை நடத்த சென்றனர். அப்போது இரவு ஆகிவிட்டதால் ஆலையில் புதன்கிழமை காலை சோதனை நடத்தலாம் என கேரள போலீஸார் சென்றதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.