தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடந்தது.
பள்ளியின் நிர்வாகச் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். முதல்வர் சித்ரா செளந்திரராஜன் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில், வேளாண்மையில் இயற்கை விவசாய தொழு உரங்களின் பயன்பாடு, எரிவாயுவை எரிபொருளாக மாற்றி இருச்சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் விதம், மீன் தொட்டிகளை பயன்படுத்தும் விதம் குறித்து காட்சிப்படுத்தியிருந்தனர். பலவித கைவினைப் பொருள்களோடு அறிவியல் தொடர்பான ஓவியங்களையும் கண்காட்சியில் மாணவ, மாணவியர் வைத்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


