கோவை அருகே விவசாயிக்குச் சொந்தமான ஆடுகளைத் தாக்கியது சிறுத்தையா என்பது குறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை, சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி (65). இவர் தனது ஆடுகளை அருகிலுள்ள மலை அடிவாரத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை தோட்ட வேலைக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்துச் சென்று பார்த்தபோது அவரது ஆடுகளில் ஒன்று இறந்த நிலையிலும், இரண்டு படுகாயங்களுடன் இருந்துள்ளன. மேலும், நான்கு மாத குட்டி ஒன்றும் அப்பகுதியில் இருந்து காணாமல்போனது.
இதையடுத்து படுகாயமடைந்த ஆடுகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறுகையில், அருகில் உள்ள அய்யாசாமி மலையில் உள்ள வன விலங்குகள் எதுவும் தாக்கியிருக்க வாய்ப்புள்ளது. சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஒரு குறிப்பிட்ட விலங்கை மட்டுமே குறிவைத்து அதை மட்டுமே தாக்கும். ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிக்குச் சொந்தமான நான்கு ஆடுகளையும் சிறுத்தைத் தாக்கியதாகக் கூறுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள வெறி நாய்கள் கூட ஆடுகளைத் தாக்கியிருக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
இப்பகுதியில் சுற்றித் திரிவது சிறுத்தைதான் என்றும் உடனடியாக அதைப் பிடிக்க கூண்டு வைக்குமாறு வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், முழுமையாக ஆய்வு செய்து சிறுத்தை என உறுதி செய்த பின்னரே அதைப் பிடிப்பதற்கு கூண்டு வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் இரவு நேரத்தில் வனத் துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல பூலுவபட்டி அருகே விவசாயிக்குச் சொந்தமான ஐந்து ஆடுகள், நான்கு நாட்டுக் கோழிகளை சிறுத்தை ஜனவரி 18 ஆம் தேதி தாக்கியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
