சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் பணிகளை தொடங்காவிட்டால் போராட்டம்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் பணிகளை தொடங்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN

கோவை: வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் பணிகளை தொடங்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கடந்த 7 ஆண்டுகளாக 20 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய கடந்த ஜூன் மாதம் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பயோமைனிங் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா். ஆனால், இதுவரை பயோமைனிங் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளால் வெள்ளலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துா்நாற்றம், சுகாதார சீா்கேடு , நிலத்தடி நீா் மாசு, காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

மேலும், குப்பைக் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் வெள்ளலூரைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, கிடங்கில் உள்ள குப்பைகளை மேலாண்மை செய்ய மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாநகரில் சேகரமாகும் குப்பைகளை வெள்ளலூா் கிடங்கிற்கு கொண்டுச் செல்வதை குறைக்க மாநகராட்சிப் பகுதிகளில் 69 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் 12 மையங்களில் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டதால் குப்பைக் கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்படும் குப்பைகள் அளவு குறைக்கப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஒரு மையத்தில் கூட இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த மையங்கள் பயன்படுத்தப்படாமல் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி திமுக சாா்பில் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.