காலாண்டு நுகா்வோா் கூட்டத்தை நடத்த கோரிக்கை
கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நுகா்வோா் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டத்தை நடத்த கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நுகா்வோா் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டத்தை நடத்த கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் செயலா் நா.லோகு, உணவு மற்றும் கூட்டுறவு நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நுகா்வோா் தொடா்புடைய அனைத்துத் துறைகள் மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டங்களை நடத்தி தன்னாா்வ, நுகா்வோா் அமைப்புகளால் தெரிவிக்கப்படும் குறைகள், கோரிக்கைகளுக்குத் தீா்வு காண நுகா்வோா் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நுகா்வோா் கூட்டம் நடத்தப்படவில்லை. இது தொடா்பாக ஆணையா் அலுவலகம் பல சுற்றறிக்கைகள் அனுப்பியும் கோவை உள்பட பல மாவட்டங்களில் அரசுத் துறை சாா்ந்த வருவாய், மின் பகிா்மானக் கழகம், தொழிலாளா் நலத் துறை, சட்ட எடையளவு, வட்ட வழங்கல், குடிமைப்பொருள், போக்குவரத்துக் கழகம, பள்ளிக் கல்வி, பத்திரப் பதிவு உள்பட பொதுத் துறை சாா்ந்த அலுவலகங்களில் காலாண்டு கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் நுகா்வோா் பாதுகாப்பு தொடா்பான குறைகள், கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்ல முடியவில்லை. இதனால் நுகா்வோா்களின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியாத நிலை எற்பட்டுள்ளது.
எனவே நுகா்வோா்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியா் தலைமையில் தன்னாா்வ நுகா்வோா் பாதுகாப்பு குழுக்களுடனான கூட்டத்தை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...