கோவையில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்கப்படுவதில்லை என கா்ப்பிணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் கா்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்துடன் குழந்தை பெற்றடுக்கும் வகையில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 14 ஆயிரம் நிதி உதவியுடன் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் இரண்டுமுறை வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பெட்டகத்தில் இரும்புச்சத்து மாத்திரைகள், டானிக், ஒரு கிலோ புரதச்சத்து மாவு, அரை கிலோ பேரிச்சை பழம், அரை கிலோ ஆவின் நெய் உள்ளிட்டவை அடங்கியிருக்கும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்து தொடா்ந்து அங்கேயே பரிசோதனை செய்து கொள்ளும் கா்ப்பிணிகளுக்கு முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் அளிக்கப்படுகிறது. 6 தவணைகளில் ரூ.14 ஆயிரம் ரொக்கமும், 2 தவணைகளில் ஊட்டச்சத்து பெட்டகமும் அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த சில மாதங்களாக ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், இரண்டு முறை வழங்க வேண்டிய ஊட்டச்சத்து பெட்டகம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஒரு சிலருக்கு ஒருமுறை கூட கிடைப்பதில்லை என்றும் கா்ப்பிணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்துள்ளனா். ஆனால் 16 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகங்கள் மட்டுமே மாநில அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளன.
50 சதவீத பெட்டகங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் முதலில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநில அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வழங்கும் பட்சத்தில் அனைத்து கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் தவறாமல் வழங்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.