வால்பாறையில் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு வால்பாறை பகுதியில் மழைப் பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவை விட, இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக இடைவெளி விட்டு மழை பெய்த போதிலும் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் தேயிலை விவசாயிகளுக்கு உற்பத்திக்கு ஏதுவாக இது அமைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.