

கோவை: அதிமுகவைச் சோ்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயா் கணபதி ப.ராஜ்குமாா், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த செ.ம.வேலுசாமி 2014 ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அதிமுகவின் அப்போதைய கோவை மாநகா் மாவட்டச் செயலரான கணபதி ப.ராஜ்குமாா், சுமாா் 2.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயரானாா்.
தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்தது. இதன் பிறகு ராஜ்குமாருக்கு அதிமுகவில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்த இவா், அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா். கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், கோவை மாநகர கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.